செய்திகள்

வாக்காளர் விழிப்புணர்வு குறித்த விளம்பர படம் ஒளிபரப்பு

Published On 2019-03-13 17:46 GMT   |   Update On 2019-03-13 17:46 GMT
வாக்காளர் விழிப்புணர்வு குறித்த விளம்பர படம் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் பகுதியில் ஒளிபரப்பப்பட்டது.
புதுக்கோட்டை:

பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதையொட்டி இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்கினை தவறாது அளித்திடும் வகையில், விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டு உள்ள வாக்காளர் விழிப்புணர்வு குறித்த 5 நிமிடம் 10 வினாடிகள் ஓடக்கூடிய விளம்பர படம், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒளிபரப்பப்படுகிறது. இந்த விழிப்புணர்வு விளம்பர படம் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் பகுதியில் ஒளிபரப்பப்பட்டது.

இதை கலெக்டர் உமா மகேஸ்வரி நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், இதேபோல உள்ளூர் கேபிள் டி.வி.களிலும், திரையரங்குகளிலும் வாக்காளர் விழிப்புணர்வு விளம்பர படம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றார். 
Tags:    

Similar News