செய்திகள்

துபாய், மலேசியா, சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்திய பெண்கள் உள்பட 20 பேர் சிக்கினர்

Published On 2019-03-06 16:01 IST   |   Update On 2019-03-06 16:01:00 IST
துபாய், மலேசியா, சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் ரூ.37 லட்சம் தங்கம் கடத்திய பெண்கள் உள்பட 20 பேர் சிக்கினர்.

ஆலந்தூர்:

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவம் அதிகரித்துள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தும் தங்கம் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை இலங்கை, சிங்கப்பூர், துபாய், மலேசியாவில் இருந்து வந்த விமானங்களில் பயணம் செய்தவர்களிடம் சுங்கதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது தங்கம் கடத்தி வந்த 4 பெண்கள் உள்பட 20 பேர் அதிகாரிகளிடம் சிக்கினர்.

அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.37 லட்சம் ஆகும். இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் இருந்து இலங்கைக்கு இன்று காலை பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளிடம் சுங்க துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது சென்னையை சேர்ந்த பெரோஸ்கான் என்பவர் உள்ளாடையில் மறைத்து அமெரிக்கா, யூரோ உள்ளிட்ட வெளிநாட்டு பணங்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும்.

Similar News