செய்திகள்

ஆம்பூரில் முதியவர் மர்ம மரணம்- கொலையா? போலீசார் விசாரணை

Published On 2019-03-02 16:05 IST   |   Update On 2019-03-02 16:05:00 IST
ஆம்பூரில் முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆம்பூர்:

ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 60). டெய்லர். இவர் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்ப வில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில் ஆம்பூர் பை-பாஸ் சாலை அண்ணாமலையார் தெருவில் இன்று காலை முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் இறந்து கிடப்பது ரமேஷ் என்பது தெரியவந்தது. உடலை மீட்ட போலீசார் உறவினர்களுக்கு தகவலை தெரிவித்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News