சிறுமியை கர்ப்பிணியாக்கிய வேதாரண்யம் வாலிபர் கைது
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வேட்டை காரனிருப்பு அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது வேட்டைக்காரனிருப்பு பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி (வயது 27) என்ற வாலிபர் சிறுமி வேலைபார்த்த அந்த கடைக்கு அடிக்கடி வந்து சென்ற போது இருவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இதில் சிறுமி 5 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து சிறுமி சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்டபோது அதற்கு சிரஞ்சீவியும் அவரது தாய் தமிழ்செல்வியும் மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதனால் சிறுமி வேதாரண்யம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வேதாரண்யம் டி.எஸ்.பி. ஸ்ரீகாந்த், இன்ஸ்பெக்டர்கள் வேம்பரசி, வர்ஜினியா ஆகியோர் வழக்குபதிவு செய்து சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த சிரஞ்சீவி மற்றும் அவரது தாய் தமிழ்ச்செல்வி ஆகியோரை கைது செய்தனர்.