செய்திகள்
நாட்டறம்பள்ளி அருகே வீடு எரிந்து முதியவர் உடல் கருகி பலி
நாட்டறம்பள்ளி அருகே வீடு எரிந்து முதியவர் உடல் கருகி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டறம்பள்ளி:
நாட்டறம்பள்ளி அருகே உள்ள நாயனஅத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 70). இவரது மனைவி யசோதா நேற்று இரவு குடிசை வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு வீட்டில் திடீரென தீபிடித்து எரிந்தது. கண்விழித்த யசோதா வெளியே ஓடி வந்துவிட்டார். முனுசாமி தீயில் சிக்கிகொண்டார். யசோதா கூச்சலிட்டார் அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். உடல் கருகிய முனுசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
நாட்டறம்பள்ளி போலீசார் முனுசாமி உடலை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். யாராவது வேண்டுமென்று தீ வைத்தார்களா அல்லது விபத்தில் தீ பற்றியதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.