செய்திகள்

சேலம் கருப்பூரில் பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு

Published On 2019-02-23 10:23 IST   |   Update On 2019-02-23 10:23:00 IST
சேலம் கருப்பூரில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 5 பவுன் செயினை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் கோட்டகவுண்டம் பட்டி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சசிலா (வயது 38).

இவர் நேற்றிரவு கோட்டகவுண்டம் பட்டியில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடைக்கு ஜெராக்ஸ் எடுப்பதற்காக நடந்து சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவர் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ஆனால் மர்ம நபர்கள் 2 பேரும் பறித்த செயினுடன் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பினர். இதனால் கதறி அழுத அவர் சம்பவம் குறித்து கருப்பூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

நேற்று முன்தினம் சேலம் ஜங்சன் புதுரோடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 6 பவுன் செயின் பறித்த நிலையில் எப்போதும் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த செயின் பறிப்பு சம்பவம் பொது மக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் போலீசார் தீவிர ரோந்து சென்று வழிப்பறியில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News