செய்திகள்

திருவான்மியூரில் நாளை ப.சிதம்பரம் பேசுகிறார்

Published On 2019-02-21 09:51 GMT   |   Update On 2019-02-21 09:51 GMT
திருவான்மியூரில் காங்கிரஸ் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாளை நடக்கிறது. இதில் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசுகிறார். #pchidambaram #congress

சென்னை:

காங்கிரஸ் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாளை (22-ந் தேதி) மாலை 6 மணிக்கு திருவான்மியூர் வடக்கு மாட வீதியில் நடக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை தாங்குகிறார். முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் வரவேற்கிறார். எச்.வசந்தகுமார், எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், வீரபாண்டியன், தி.நகர் ஏ.ஸ்ரீராம் முன்னிலை வகிக்கிறார்கள். முன்னதாக மாலை 5 மணிக்கு லஷ்மன் ஸ்ருதி குழு வினரின் இன்னிசை கச்சேரி நடக்கிறது. 

கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செய்துள்ளது. #pchidambaram #congress

Tags:    

Similar News