செய்திகள்

மகன்கள் வேலைக்கு செல்லாததால் விரக்தியில் தந்தை தற்கொலை

Published On 2019-02-20 11:42 GMT   |   Update On 2019-02-20 11:42 GMT
தட்டாஞ்சாவடி அருகே மகன்கள் வேலைக்கு செல்லாததால் விரக்தி அடைந்த தந்தை தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

தட்டாஞ்சாவடி கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் என்கிற சங்கர் (வயது 52). மரச்சாமான்கள் செய்யும் தொழில் செய்து வந்தார்.

இவரது மனைவி ஜெயசக்தி 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

அவர்கள் சரியாக படிக்கவில்லை. வேலைக்கும் செல்லவில்லை. தாய் இல்லா பிள்ளைகளான உங்களை கஷ்டப்பட்டு வளர்த்துள்ளேன். நீங்கள் ஏதாவது வேலைக்கு செல்லுங்கள் என்று கூறி கண்ணன் வற்புறுத்தி வந்தார்.

ஆனாலும், அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. இதனால் வீட்டில் நைலான் கயிறால் தூக்கு மாட்டி தொங்கினார். அதன் சத்தம் கேட்டு அவரது அண்ணன் ஓடி வந்தார். மற்றவர்களும் அங்கு வந்தனர்.

அவர்கள் கண்ணனை தூக்கில் இருந்து இறக்கி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

இது தொடர்பாக கோரி மேடு சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News