செய்திகள்
நாங்குநேரி-குரும்பூரில் தனித்தனி விபத்துக்களில் 2 வாலிபர்கள் பலி
நாங்குநேரி மற்றும் குரும்பூரில் வெவ்வேறு விபத்துக்களில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தம்மபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது33). இவர் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு வாகனங்கள் மீது கல்வீசி தாக்கி வந்தார்.
நேற்று முன்தினம் இவர் நாங்குநேரி 4 வழிச்சாலையை கடந்த போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த வேல்முருகனை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் மணிக்குமார் (36). இவர் மோட்டார் சைக்கிளில் குரும்பூர் அருகே சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தம்மபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது33). இவர் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு வாகனங்கள் மீது கல்வீசி தாக்கி வந்தார்.
நேற்று முன்தினம் இவர் நாங்குநேரி 4 வழிச்சாலையை கடந்த போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த வேல்முருகனை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் மணிக்குமார் (36). இவர் மோட்டார் சைக்கிளில் குரும்பூர் அருகே சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews