செய்திகள்

வல்லூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

Published On 2019-02-19 09:55 GMT   |   Update On 2019-02-19 09:55 GMT
வல்லூரில் உள்ள அனல் மின் நிலையத்தில் முதலாம் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த வல்லூரில் உள்ள தேசிய அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் என 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் முதலாம் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாம் அலகில் மட்டும் 1000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.

பழுதான கொதிகலன் குழாயை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News