செய்திகள்

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

Published On 2019-02-16 16:14 GMT   |   Update On 2019-02-16 16:14 GMT
ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. #TNGovernment
சென்னை:

* சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் போக்குவரத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* சென்னை மாநாகராட்சி ஆணையராக இருந்த கார்த்திகேயன் நகராட்சி ஆணையாராக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜியாக இருந்த குமரகுருபரன் பேரிடர் மேலாண்மை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை சிறப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* சுகாதாரத்துறை செயலாளராக பீலா ராஜேஷ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

* ஐஏஎஸ் அதிகாரி நாகராஜனுக்கு சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

* புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ், இந்திய மருத்துவம்,ஹோமியோபதி இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* திருச்சி மாவட்ட ஆட்சியர் கே.ராஜாமணி, கோவை மாவட்ட ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* திருச்சி மாவட்ட ஆட்சியராக எஸ்.சிவாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

* தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, புதுக்கோட்டை ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* தமிழ்நாடு குடிநீர்,வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த் திருவாரூர் ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* கோவை மாநகராட்சி கே.விஜயகார்த்திகேயன் தமிழ்நாடு ஊரக கல்வி நிறுவன இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலை முன்னிட்டு திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கோவை மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #TNGovernment
Tags:    

Similar News