செய்திகள்

தாரமங்கலம் அருகே பெண்ணிடம் 5 பவுன் தங்க செயின் வழிப்பறி

Published On 2019-02-13 14:55 GMT   |   Update On 2019-02-13 14:55 GMT
தாரமங்கலம் அருகே பெண்ணிடம் 5 பவுன் தங்க செயினை மோட்டார் சைக்கிளில் வந்த ஹெல்மெட் கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.
தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் மேட்டூர் புதுசாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன் (54). இவர் புதுசாம்பள்ளியில் உள்ள வீட்டு வசதி வாரியத்தில் செயலாளராக உள்ளார். இவரும், இவரது மனைவி உஷா (48) என்பவரும் சம்பவத்தன்று சேலம் சென்று விட்டு பின்னர்  மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.

தாரமங்கலம் அருகே பவளத்தானூர் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 2 கொள்ளையர்கள் திடீரென உஷா கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க நகையை பறித்து விட்டு சென்று விட்டனர்.

இது குறித்து ஹரிகரன் தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரின் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சக்கரபணி, சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News