செய்திகள்
கம்பம் அருகே பள்ளிக்குள் புகுந்து கொள்ளை
கம்பம் அருகே பள்ளிக்குள் புகுந்து கொள்ளையடித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
கம்பம் எல்.எஸ்.ரோடு பகுதியை சேர்ந்தவர் பெரோஸ்ஜாபர். இவர் அதேபகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மாலையில் பள்ளி முடிந்து அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர்.
நள்ளிரவில் பள்ளிக்குள் புகுந்த மர்மநபர்கள் அலுவலக கதவை உடைத்து அங்கே இருந்த ரூ.35 ஆயிரம் ரொக்கம், சி.சி.டி.வி.கேமிரா, ஹார்டுடிஸ்க் ஆகிய பொருட்களை திருடிச்சென்றனர்.
மறுநாள் காலையில் பள்ளிக்கு வந்து பார்த்தபோது பணம் மற்றும் பொருட்கள் கொள்ளைபோனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.