செய்திகள்

சாத்தூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை- தொழிலாளி கைது

Published On 2019-02-11 09:21 GMT   |   Update On 2019-02-11 09:21 GMT
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நென்மேனியைச் சேர்ந்த 9 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 37), கூலி தொழிலாளி. இவர் சைகை மூலமாக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் மாணவியின் தாயார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து ராஜபாண்டி கைது செய்யப்பட்டார்.
Tags:    

Similar News