செய்திகள்
புன்னம் சத்திரம் அருகே லாரி மோதி ஒருவர் பலி
புன்னம் சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
வேலாயுதம்பாளையம்:
கரூர் கடவூர் அருகே, தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன் (55). இவர் தனது மோட்டார் சைக்கிளில் புன்னம்சத்திரம் அருகே பஞ்சயங்குட்டை- நடுப்பாளையம் சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பழனியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்தும் வேலாயுதம் பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் நல்லையனை கைது செய்தனர்.