செய்திகள்

திருமங்கலத்தில் திருமண ஆசைகாட்டி பெண் பாலியல் பலாத்காரம் -வாலிபருக்கு வலைவீச்சு

Published On 2019-02-10 12:34 GMT   |   Update On 2019-02-10 12:34 GMT
திருமண ஆசைகாட்டி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

பேரையூர்:

திருமங்கலம் மறவன்குளம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மச்சக் காளை. இவரது மகள் மகாலட்சுமி (வயது 19). இவர் வயிற்று வாலியால் அவதிப்பட்டார். இதனால் ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்தபோது மகாலட்சுமி வயிற்றில் 8 மாத குழந்தை இறந்த நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், மகளிடம் விசாரித்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த குருசாமி மகன் குமரேசன் (25) தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மகாலட்சுமி தெரிவித்தார்.

இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2 பேரும் காதலித்து வந்ததாகவும் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி குமரேசன் பலமுறை உல்லாசம் அனுபவித்ததாகவும் மகாலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போது திருமணத்திற்கு மறுப்பதாகவும் தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பூரில் வேலை பார்த்து வரும் குமரேசனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News