செய்திகள்

தருமபுரி அருகே சூதாடிய 3 பேர் கைது

Published On 2019-02-06 13:57 GMT   |   Update On 2019-02-06 13:57 GMT
தருமபுரி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடிய 3 பேரை கைது செய்தனர்.
தருமபுரி:

தருமபுரியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பழைய தருமபுரி அடுத்துள்ள கொளகத்தூர் ஏரிகரையில் 3 பேர் சூதாடிக் கொண்டிருந்தனர். 

இதனை பார்த்த போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் பழைய தருமபுரியை சேர்ந்த ஆனந்தன், கோபி மற்றும் சுரேஷ் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் இவர்களிடம் இருந்து ஒரு சீட்டு கட்டு மற்றும் ரூ.2,520 பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News