செய்திகள்
திருப்புவனம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கொத்தனார் பலி
திருப்புவனம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கொத்தனார் பலியானார்.
திருப்புவனம்:
மதுரை மாவட்டம் சக்குடியை சேர்ந்தவர் பழனிக்குமார் (வயது 38). இவர் திருப்புவனம் அருகே நெல்முடிகரையில் வசித்து வந்த நிலையில், கொத்தனாராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் மோட்டார்சைக்கிளில் மதுரைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
திருப்புவனம் 4 வழிச்சாலை பாலத்தின் அருகே வந்த போது, அங்கிருந்த வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது. அப்போது நிலைதடுமாறிய பழனிக்குமார் தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
மதுரை மாவட்டம் சக்குடியை சேர்ந்தவர் பழனிக்குமார் (வயது 38). இவர் திருப்புவனம் அருகே நெல்முடிகரையில் வசித்து வந்த நிலையில், கொத்தனாராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் மோட்டார்சைக்கிளில் மதுரைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
திருப்புவனம் 4 வழிச்சாலை பாலத்தின் அருகே வந்த போது, அங்கிருந்த வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது. அப்போது நிலைதடுமாறிய பழனிக்குமார் தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.