செய்திகள்
மீன்சுருட்டி அருகே வேன் மோதியதில் வாலிபர் படுகாயம்
மீன்சுருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள அய்யப்பன் நாயகன் பேட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராஜேஷ் (வயது 23). இவர் நேற்று முன்தினம் மாலை தனது மோட்டார் சைக்கிளில் அருகே உள்ள பாப்பாக்குடி கிராமத்திற்கு சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
பாப்பாக்குடி மரபட்டறை அருகே வந்த போது, எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜேசை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசந்தர் வழக்குபதிவு செய்து வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.