செய்திகள்
மானூர் அருகே கார் மோதி வியாபாரி பலி
மானூர் அருகே கார் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள அயுப் கான்புரத்தை சேர்ந்தவர் அய்யாத்துரை. இவர் அப்பகுதியில் அரிசி கடை வைத்து நடத்தி வந்தார். வீடு வீடாக சென்று எண்ணை வியாபாரமும் செய்து வந்தார். நேற்று இரவு இவர் அரிசி கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு புறப்பட்டார்.
அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அய்யாத்துரை சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அய்யாத்துரை பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.