செய்திகள்

ஈரோட்டில் கண்டக்டரை தாக்கிய செக்கிங் இன்ஸ்பெக்டரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published On 2019-01-26 13:34 GMT   |   Update On 2019-01-26 13:34 GMT
அரசு கண்டக்டரை தாக்கிய செக்கிங் இன்ஸ்பெக்டரை கண்டித்து அரசு டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:

அரசு போக்குவரத்து கழகத்தின் ஈரோடு மண்டல கரூர் கிளையில் அரசு பஸ் கண்டக்டராக மோகன் குமார் பணியாற்றி வருகிறார். இவரை இன்று காலை ஈரோடு அரசு போக்குவரத்து கழகத்தின் செக்கிங் இன்ஸ்பெக்டர் பிரபு கலையரசன் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக டெப்போ முன்பு இன்று அதிகாலை 5.30 மணி அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு நிர்வாகி சரவணன் தலைமை வகித்தார்.

தொழிற்சங்கத்தை சேர்ந்த ரவி, சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இன்று காலை 45 நிமிடங்கள் டெப்போவில் இருந்து அரசு பஸ்கள் ஏதுவும் எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு தாலுகா போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர். #tamilnews
Tags:    

Similar News