செய்திகள்
மதுரவாயலில் ஆட்டோ திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
நெற்குன்றம் முனியப்பா நகரை சேர்ந்தவர் மணி வண்ணன். ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 9-ந் தேதி வானகரத்தில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு ஆட்டோவை நிறுத்தி விட்டு டிபன் வாங்க சென்றார். திரும்பி வந்த போது ஆட்டோவை காணவில்லை. மர்ம நபர் ஆட்டோவை திருடி சென்று இருப்பது தெரிந்தது.
இது தொடர்பாக மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து பழைய குற்றவாளியான கடம்பத்தூரை சேர்ந்த தியாகராஜனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
குரோம்பேட்டையில் மோட்டார் சைக்கிளை திருடியதாக நாமக்கல்லை சேர்ந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.