செய்திகள்
ராமேசுவரத்தில் காரில் கடத்திய 500 மதுபாட்டில்கள் பறிமுதல்
ராமேசுவரத்தில் காரில் கடத்திய 500 மதுபாட்டில்கள்களை பறிமுதல் செய்த போலீசார் 2 வாலிபர்களை கைது செய்தனர்.
ராமேசுவரம்:
பாம்பன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயா ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி விசாரித்தபோது அதில் இருந்த 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை சோதனையிட்டபோது அதில் 10 பெட்டிகளில் 500 மதுபாட்டில்கள் இருந்தன.
விசாரணையில் அவர்கள் அரியமான் கிராமத்தை சேர்ந்த இருள்வேல் (வயது 24), சாத்தக்கோன்வலசை கிராமத்தை சேர்ந்த தங்கப்பாண்டியன்(22) என்பதும், ராமேசுவரம் பகுதியில் கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அந்த 2 வாலிபர்களையும் கைது செய்ததுடன் மதுபாட்டில்களையும், அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.
பாம்பன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயா ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி விசாரித்தபோது அதில் இருந்த 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை சோதனையிட்டபோது அதில் 10 பெட்டிகளில் 500 மதுபாட்டில்கள் இருந்தன.
விசாரணையில் அவர்கள் அரியமான் கிராமத்தை சேர்ந்த இருள்வேல் (வயது 24), சாத்தக்கோன்வலசை கிராமத்தை சேர்ந்த தங்கப்பாண்டியன்(22) என்பதும், ராமேசுவரம் பகுதியில் கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அந்த 2 வாலிபர்களையும் கைது செய்ததுடன் மதுபாட்டில்களையும், அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.