செய்திகள்

கடையாலுமூடு அருகே 2 குழந்தைகளின் தாய் மாயம்

Published On 2019-01-21 14:01 GMT   |   Update On 2019-01-21 14:01 GMT
கடையாலுமூடு அருகே வங்கிக்கு சென்ற 2 குழந்தைகளின் தாய் மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில்:

கடையாலுமூடு ஆம்பாடி பகுதியை சேர்ந்தவர் மணி கண்டன். இவரது மனைவி சாஜினி (வயது 35). இவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு மகனும், மகளும் உள்ளனர். மணிகண்டன் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி சாஜினி தனது மோட்டார் சைக்கிளில் கடையாலுமூட்டில் உள்ள வங்கிக்கு சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் வங்கிக்கு சென்ற சாஜினி வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை தேடி வங்கிக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வெளிநாட்டில் உள்ள மணி கண்டனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடையாலுமூடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர். உறவினர்களும் மாயமான சாஜினியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News