செய்திகள்

சேதராப்பட்டில் பட்டதாரி வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-01-18 16:31 GMT   |   Update On 2019-01-18 16:31 GMT
சேதராப்பட்டில் பட்டதாரி வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேதராப்பட்டு:

சேதராப்பட்டு புதுக் காலனியை சேர்ந்தவர் குட்டியாண்டி. இவரது மகன் முகிலன் (வயது 31). பட்டதாரியான இவர் தனது மனைவி பிரசன்னா தேவி மற்றும் மகள் நவ்யா ஆகியோருடன் சோரப்பட்டு பழைய காலனியில் வசித்து வந்தார்.

முகிலன் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்தார். இவருக்கும், இவரது மனைவி பிரசன்னா தேவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று பிரசன்னா தேவி தன்னையும், மகளையும் வெளியே அழைத்து செல்லும்படி முகிலனிடம் கூறினார். அழைத்து செல்வதாக கூறி சென்ற முகிலன் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான மற்றொரு வீட்டுக்கு சென்றார்.

ஆனால், வெகு நேர மாகியும் கணவன் வராததால் சந்தேகம் அடைந்த பிரசன்னாதேவி அந்த வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News