செய்திகள்

கோபி அருகே பள்ளி மாணவி கடத்தல் போலீசில் பரபரப்பு புகார்

Published On 2019-01-16 12:22 GMT   |   Update On 2019-01-16 12:22 GMT
கோபி அருகே பள்ளி மாணவி கடத்தப்பட்டது குறித்து பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

கோபி:

கோபி அடுத்த புதுவள்ளியாம்பாளையத்தை சேர்ந்தவர் பேபி. இவரது மகள் தாரண வள்ளி. இவர் கோபியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி வீட்டுக்கு திரும்பி வர வில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து அவரின் பெற்றோர் கோபி போலீசில் புகார் செய்தார்.

புகாரில் மாணவியை கணக்கம் பாளையத்தை சேர்ந்த சரவணன் என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டார். அவரிடம் இருந்து மீட்டு தர வேண்டும் என்று கூறி உள்ளனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News