செய்திகள்

திருமங்கலம் அருகே வாலிபர்களுக்கு கத்திக்குத்து

Published On 2019-01-14 10:28 GMT   |   Update On 2019-01-14 10:28 GMT
திருமங்கலம் அருகே 2 வாலிபர்களை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

பேரையூர்:

திருமங்கலம் அண்ணா நகரைச் சேர்ந்த ஆண்டிச்சாமி மகன் வீரமணி (வயது 34). இவரது பக்கத்து வீட்டுக்காரர் விருமாண்டி (35). இவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் வீரமணி போதையில் வந்து விருமாண்டியிடம் சண்டை போட்டார். தகராறு முற்றவே வீரமணி ஆத்திரமடைந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விருமாண்டியின் வயிற்றில் குத்தினார். இதைத் தடுக்க வந்த முத்தையா (32) என்பவரது கையிலும் கத்திக்குத்து விழுந்தது.

கத்திக்குத்தில் காயமடைந்த இருவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கத்திக்குத்து குறித்து திருமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.

Tags:    

Similar News