செய்திகள்

திருத்துறைப்பூண்டி அருகே 2 டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள்- பணம் கொள்ளை

Published On 2019-01-09 09:19 GMT   |   Update On 2019-01-09 09:19 GMT
திருத்துறைப்பூண்டி அருகே 2 டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள்- பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த ராயநல்லூர் புழுதிக்குடி சாலையில் அருகருகே 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் ஒரு கடையில் திருக்களாரை சேர்ந்த முருகானந்தம்(வயது 46) என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். பள்ளிவர்த்தியை சேர்ந்த அருள்ஜோதி(40), மீனம்பநல்லூரை சேர்ந்த ராஜா ஆகிய 2 பேரும் விற்பனையாளர்களாகவும் உள்ளனர். இதே போல் மற்றொரு கடையில் ஆதிச்சபுரத்தை சேர்ந்த ஜீவா(47) மேற்பார்வையாளராகவும், ஓவரூரை சேர்ந்த கரிகாலன்(41), பாமணியை சேர்ந்த லெனின்(43) ஆகியோர் விற்பனையாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விற்பனையை முடித்துவிட்டு 2 டாஸ்மாக் கடைகளையும் பூட்டி வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று பகலில் கடையை திறக்க ஊழியர்கள் வந்தபோது டாஸ்மாக் கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது 2 கடைகளிலும் ரூ. 1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களும், ரூ. 11 ஆயிரமும் திருட்டு போனது தெரிய வந்தது.

இது தொடர்பாக 2 டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் திருத்துறைப்பூண்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்கள், பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News