செய்திகள்

பாவூர்சத்திரம் அருகே வியாபாரியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2019-01-07 14:23 GMT   |   Update On 2019-01-07 14:23 GMT
பாவூர்சத்திரம் அருகே கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த வியாபாரியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள செட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி மகேஸ்வரி (வயது35). வியாபாரியான ராஜ் பல்வேறு தொழில்கள் செய்து வந்தார். இந்நிலையில் அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதில் அவர் ஏராளமான இடங்களில் கடன் வாங்கியுள்ளார். 

கடன் தொல்லையால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த மகேஸ்வரி தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். அதன்படி நேற்று அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News