செய்திகள்

போடியில் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்

Published On 2019-01-07 18:52 IST   |   Update On 2019-01-07 18:52:00 IST
தேனி மாவட்டம் போடியில் சப்-இன்ஸ்பெக்டர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி பகுதியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் (வயது 50). இவர் போடி அரண்மனை ரவுண்டானா பகுதியில் பணியில் இருந்தார்.

அப்போது முருகேசன் திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை தூக்கிக் கொண்டு போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இது குறித்து டாக்டர்கள் கூறுகையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக முருகேசன் உடல் நிலை சரி இல்லாமல் இருந்துள்ளார். அதற்காக சிகிச்சையும் எடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News