செய்திகள்

திருபுவனை அருகே மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-01-05 12:07 GMT   |   Update On 2019-01-05 12:07 GMT
திருபுவனை அருகே நோய் கொடுமையால் மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருபுவனை:

திருபுவனை அருகே குச்சிபாளையம்- திருக்கனூர் சாலையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவகி வயது (60). இவர்களுக்கு ஆனந்தன் என்ற மகன் உள்ளார். கால் ஊனமுற்ற தேவகி கடந்த சில மாதங்களாக கால் வலியினால் அவதி அடைந்து வந்தார். இதற்காக மருந்து- மாத்திரையும் சாப்பிட்டு வந்தார். ஆனால் வலி குறையவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மகன் ஆனந்தன் ஆகியோர் கூலிவேலைக்கு சென்று விட்ட நிலையில் தேவகிக்கு நோய் கொடுமை அதிகமானதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த தேவகி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் அவர் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கினார்.

மாலையில் வேலைமுடிந்து வீட்டுக்கு வந்த கிருஷ்ணமூர்த்தி அங்கு மனைவி தேவகி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, ஏட்டு ஜெயதேவன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் வில்லியனூர் மெயின்ரோடு கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது59. இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணவேணியின் மூத்த மகனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்தார். மூத்த மகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கிருஷ்ணவேணி மனவருத்தத்துடன் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கிருஷ்ணவேணி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினாயகம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News