தாம்பரம் வாலிபர் கொலையில் 4 பேர் கைது
தாம்பரம்;
கிழக்கு தாம்பரம் கணபதி புரத்தை சேர்ந்தவர் யுவராஜ் என்கிற பப்லு (வயது 20). கடந்த 31-ந் தேதி இரவு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது யுவராஜூக்கும் அவருடைய நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினர் மோதிக் கொண்டனர்.
இந்த நிலையில், யுவராஜை இரும்புலியூர் ஏரிக்கரையில் சிலர் வெட்டிக் கொன்றனர். குற்றவாளிகள் குறித்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் கொலைக்கு காரணமானவர்கள் யார்? என்பது குறித்து துப்பு துலங்கியது. இதையடுத்து கணபதிபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்கிற தேரிமணி, ராஜூ, லெனின் என்கிற பில்லா, பட்டாபி ராமத்தை சேர்ந்த முகேஷ் ஆகியோரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். 4 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் தவிர மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.