செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் எம்எல்ஏ கருணாஸ் சந்திப்பு
முதல்வர் மற்றும் அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை கூறிவந்த எம்எல்ஏ கருணாஸ், இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். #MLAKarunas #EdappadiPalaniswami
சென்னை:
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது அவர் கூறியதாவது:
தோல்வியடையும் என்பதால் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரும்பப் பெற்றேன். திருவாடானை தொகுதியில் கண்மாய்களை தூர்வாரக்கோரி முதலமைச்சரை சந்தித்தேன். தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #MLAKarunas #EdappadiPalaniswami
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரிய மனுவை வாபஸ் பெற்றதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எம்எல்ஏ கருணாஸ் இன்று சந்தித்தார். அப்போது, சிவகங்கையில் மருது பாண்டியர் சிலை அமைக்க இடம் ஒதுக்கக்கோரி முதலமைச்சர் பழனிசாமியிடம் கருணாஸ் மனு அளித்தார்.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது அவர் கூறியதாவது:
தோல்வியடையும் என்பதால் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரும்பப் பெற்றேன். திருவாடானை தொகுதியில் கண்மாய்களை தூர்வாரக்கோரி முதலமைச்சரை சந்தித்தேன். தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #MLAKarunas #EdappadiPalaniswami