செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்- அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2019-01-02 08:56 GMT   |   Update On 2019-01-02 08:56 GMT
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று காலை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். #plasticmaterials #Koyambedumarket

சென்னை:

கோயம்பேடு மார்க்கெட் மானேஜிங் கமிட்டி முதன்மை நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

காய்கறி, பழம், பூ மார்க்கெட்டுகளில் ஒவ்வொரு கடையாக சென்று ஆய்வு செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப் மற்றும் பொருட்கள் விற்பனைக்கு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் அனைத்து கடைகளிலும் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை சரக்கு ஆட்டோவில் ஏற்றி கொண்டு சென்றனர். சுமார் ஒரு டன் அளவுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த அதிரடி சோதனையால் கோயம்பேடு மார்க்கெட் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. #plasticmaterials #Koyambedumarket

Tags:    

Similar News