செய்திகள்

மணப்பாறையில் இன்று ரெயிலில் அடிப்பட்டு வாலிபர் உடல் சிதறி பலி

Published On 2018-12-31 12:49 GMT   |   Update On 2018-12-31 12:49 GMT
மணப்பாறையில் இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரெயிலில் அடிப்பட்டு பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மணப்பாறை:

திருச்சி மாவட்டம் மணப்பாறை திண்டுக்கல் சாலை ரெயில்வே மேம்பாலம் கீழ்பகுதியில் தண்டவாளத்தில் இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இது குறித்த தகவல் அறிந்ததும் திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.  

பின்னர் அரை கி.மீ. தூரத்திற்கு சிதறி கிடந்த உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? அல்லது ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.          
Tags:    

Similar News