செய்திகள்

சீர்காழி அருகே பாக்கெட் சாராயம் கடத்திய 2 பேர் கைது

Published On 2018-12-31 09:43 GMT   |   Update On 2018-12-31 09:43 GMT
சீர்காழி அருகே பாக்கெட் சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்காழி:

நாகை எஸ்.பி. விஜயக்குமார் உத்தரவின் பேரில் திருவெண்காடு இன்ஸ்பெக்டர் வேலுதேவி, தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சீர்காழி அருகே ஆலங்காடு பகுதியில் வாகனசோதனை மேற்கொண்டனர். அப்போது காரைக்கால் பகுதியிலிருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் 200 லிட்டர் சாராயம் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு கடத்தி வருவது தெரிந்தது. இதையடுத்து சாராயத்தோடு காரையும் பறிமுதல் செய்து காரைக்கால் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 26) என்பவரை கைது செய்தனர்.

இதேபோல் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் பெரம்பூர் அருகே வாகனதணிக்கை செய்தபோது மோட்டார் சைக்கிளில் 120லிட்டர் சாராயம் கடத்திவந்த மாங்கா.சண்முகம்(48) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News