தாளவாடி அருகே கோவிலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி கர்நாடகா மாநில எல்லையில் தாளவாடி அருகே உள்ள கும்டாபுரத்தை சேர்ந்தவர் சங்கரப்பா (வயது 28).
இவர் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணி புரிந்து வந்தார்.
இந்த நிலையில் சங்கரப்பா விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். வீட்டில் தாளவாடிக்கு போய் விட்டு வருவதாக கூறி சென்றார். ஆனால் அவர் வீட்டுக்கு வரவில்லை.
இந்த நிலையில் அவர் கும்டாபுரம் அருகே ரோட்டோரம் உள்ள கும்பேஸ்வரா கோவில் அருகே சங்கரப்பா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது அருகே அவர் கொண்டு வந்த பை ஒன்று கிடந்தது. அதில் ஒரு டைரி, ஒரு சாக்லெட் இருந்தது. உடலில் எந்த வித காயமும் இல்லை.
அவர் தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவே கூறப்படுகிறது. போலீசார் விசாரணை நடத்தினால் தெரியவரும்.