செய்திகள்
கடலூர் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர்:
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உட்பிரிவு பட்டா மாறுதல் கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரையை கட்டாயமாக்க வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர்கள் கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயனுள்ள கணினி மற்றும் இணைய தள வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தம் கடந்த 10 முதல் தொடங்கியது.
இதனையொட்டி கடலூர் மாவட்டத்தில் 462 கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து கடந்த 17 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் 17 வது நாளான இன்று கடலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் ஜெயராமமூர்த்தி, இணை செயலாளர் லட்சுமி தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் சுரேஷ், உறுப்பினர்கள் பிரதாப், ஞானமணி தணிகாசலம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உட்பிரிவு பட்டா மாறுதல் கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரையை கட்டாயமாக்க வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர்கள் கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயனுள்ள கணினி மற்றும் இணைய தள வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தம் கடந்த 10 முதல் தொடங்கியது.
இதனையொட்டி கடலூர் மாவட்டத்தில் 462 கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து கடந்த 17 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் 17 வது நாளான இன்று கடலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் ஜெயராமமூர்த்தி, இணை செயலாளர் லட்சுமி தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் சுரேஷ், உறுப்பினர்கள் பிரதாப், ஞானமணி தணிகாசலம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.