செய்திகள்

எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார்

Published On 2018-12-24 13:56 GMT   |   Update On 2018-12-24 13:56 GMT
திருமாவளவன் பற்றி அவதூறாக பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முசிறி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர்.
முசிறி:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பற்றி அவதூறாக பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி முசிறி சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் கலைசெல்வன், மாவட்ட துணை அமைப்பாளர் கார்த்திக், முசிறி நகர பொருளாளர் சந்திரசேகரன், ஒன்றிய துணை செயலாளர் பாலகிருஷ்ணன் , 

முசிறி நகர பொறுப்பாளர்கள்  மணி கண்டபிரபு, அரவிந்தசாமி, சவுந்தரராஜன், இளவரசன், பிரபு, ராஜன் உள்பட பலரும் முசிறி கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், போலீஸ் துணை சூப்பிரண்டு மற்றும் முசிறி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர்.
Tags:    

Similar News