செய்திகள்
திருச்செந்தூர் பகுதியில் மாடுகள் திருடிய 4 பேர் கைது
திருச்செந்தூர் பகுதியில் மாடுகள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 மாடுகளை பறிமுதல் செய்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரை சேர்ந்த சின்னத்துரை, பால்சாமி, கீழநாலுமூளைக் கிணறுஆனந்த் உள்ளிட்டவர்கள் வளர்த்து வந்த 9 மாடுகள் திருடுபோனது. இது குறித்து புகாரின் பேரில் திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் திருச்செந்தூர் சண்முகபுரம் பகுதியில் சிலர் மாடுகளை மினிலாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் காயல்பட்டிணத்தை சேர்ந்த ஹனிபா (வயது 50), வீரபாண்டியபட்டிணத்தை சேர்ந்த கந்தன்(50), மனக்கரைணை சேர்ந்த காவி (44), முருகேசன் (44) என்பதும், மாடுகளை திருடி சென்றதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் திருச்செந்தூர் பகுதியில் 9 மாடுகளை திருடிசென்றதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 9 மாடுகள், திருட்டுக்கு பயன்படுத்திய மினிலாரி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வைகளை பறிமுதல் செய்தனர்.