செய்திகள்

காட்பாடி ரெயில் நிலையத்தில் பயணியிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது

Published On 2018-12-20 11:32 GMT   |   Update On 2018-12-20 11:32 GMT
காட்பாடி ரெயில் நிலையத்தில் பயணியிடம் செல்போன் பறித்தது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:

காட்பாடி ரெயில் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் எழில்வேந்தன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருப்பதியில் இருந்து வந்த ரெயிலில் இருந்து இறங்கிய வாலிபர் போலீசாரை கண்டதும் ஓடினார்.

போலீசார் அவரை விரட்டி பிடித்து விசாரித்தனர். இதில் அவர் சித்தூர் ஆட்டோ நகரை சேர்ந்த ராஜசேகரன் (வயது 35), என்பது தெரியவந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயிலில் ஏறிய பயணிகளிடம் செல்போன் பறித்தது தெரியவந்தது.

மேலும் சித்தூர், திருப்பதி ஆகிய இடங்களிலும் திருட்டில் ஈடுபட்டுள்ளார். ராஜசேகரனை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News