செய்திகள்

மேலூர் டாக்டர் வீட்டில் கொள்ளை வழக்கு: மேலும் 3 பேர் இன்று கைது

Published On 2018-12-20 08:02 GMT   |   Update On 2018-12-20 08:02 GMT
மேலூர் டாக்டர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.
மேலூர்:

மதுரை மாவட்டம் மேலூர் காந்திஜி பூங்கா சாலையை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 67). டாக்டரான இவர் கடந்த 6-ந் தேதி நடைபயிற்சி சென்றிருந்தபோது. அவரது வீட்டினுள் புகுந்த கும்பல் அவரது மனைவி மீரா (62) மற்றும் வேலைக்கார பெண், காவலாளி ஆகியோரை துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் 26 பேருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் திருமங்கலத்தில் பதுங்கி இருந்த கொள்ளையர்களை கைது செய்தனர்.

இதில் முக்கிய குற்றவாளியான போலீஸ்காரர் சூர்யா, கணபதி, ஹரிவிக்னேஷ் என இதுவரை 19 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சிலரை தேடிவந்த நிலையில் மாட்டுத்தாவணி பகுதியில் பதுங்கி இருந்த மணிராஜ், சிவகுமார், செல்வகுமார் ஆகியோரை இன்று மேலூர் டி.எஸ்.பி. சுபாஷ், இன்ஸ்பெக்டர் ஜேசு ஆகியோர் கைது செய்தனர். இதுவரை இந்த கொள்ளை வழக்கில் 22 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News