செய்திகள்

துபாய் விமானத்தில் சென்னை பயணியிடம் ரூ.6½ லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்

Published On 2018-12-18 07:22 GMT   |   Update On 2018-12-18 07:22 GMT
துபாய் விமானத்தில் சென்னை பயணியிடம் ரூ.6½ லட்சம் அமெரிக்க டாலரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்:

சென்னையில் இருந்து நேற்று இரவு ஒரு விமானம் துபாய் செல்ல தயாராக இருந்தது.

இந்தநிலையில் பயணி ஒருவர் அனுமதி இல்லாமல், வெளிநாட்டு பணம் கொண்டு செல்வதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் இந்த விமானத்தில் செல்ல இருந்த பயணிகளிடம் சோதனை செய்தனர்.

சோதனை நடந்தபோது, ஒருவருடைய நடவடிக்கை வித்தியாசமாக இருந்தது. அவரை தனியாக அழைத்துச் சென்று அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது அவருடைய பை மற்றும் உள்ளாடையில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் நோட்டுகளை மறைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது. அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய பணத்தில் அதன்மதிப்பு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.

அந்த பயணியின் பெயர் அப்துல்லா (38). ராமநாதபுரத்தை சேர்ந்தவர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News