செய்திகள்
துபாய் விமானத்தில் சென்னை வந்த பயணியிடம் 1½ கிலோ தங்கம் பறிமுதல்
துபாய் விமானத்தில் சென்னை வந்த பயணியிடம் இருந்து கடத்தி வரப்பட்ட ஒன்றரை கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
துபாயில் இருந்து இன்று அதிகாலை 2.15 மணிக்கு ஒரு விமானம் வந்தது.
இதில் சென்னை வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த 2 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒன்றரை கிலோ எடை கொண்ட இந்த தங்கத்தின் மதிப்பு 49 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இன்று காலை 3.30 மணிக்கு சென்னையில் இருந்துஇலங்கை சென்ற விமானத்தில் பயணி ஒருவரிடம் வெளிநாட்டு பணம் இருப்பதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த முகமது ஹாரிப் என்பவரின் பையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள குவைத்தினார், யூரோ பணம் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து இன்று அதிகாலை 2.15 மணிக்கு ஒரு விமானம் வந்தது.
இதில் சென்னை வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த 2 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒன்றரை கிலோ எடை கொண்ட இந்த தங்கத்தின் மதிப்பு 49 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இன்று காலை 3.30 மணிக்கு சென்னையில் இருந்துஇலங்கை சென்ற விமானத்தில் பயணி ஒருவரிடம் வெளிநாட்டு பணம் இருப்பதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த முகமது ஹாரிப் என்பவரின் பையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள குவைத்தினார், யூரோ பணம் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.