செய்திகள்
சங்கரன்கோவிலில் பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு
சங்கரன்கோவிலில் மளிகை கடை நடத்தி வந்த பெண்ணிடம் 4 பவுன் செயினை வாலிபர் பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சாந்திநகரை சேர்ந்தவர் துரை. இவரது மனைவி செல்வம் (வயது 36). இவர்கள் கழுகுமலை சாலையில் ஒரு மளிகை கடை நடத்தி வருகின்றனர். நேற்று கடையில் செல்வம் இருந்துள்ளார். அப்போது கடைக்கு 24 மதிப்புள்ள வாலிபர் வந்து பொருட்கள் கேட்டுள்ளார். அதனை செல்வம் எடுப்பதற்காக திரும்பியுள்ளார். அப்போது திடீரென அந்த வாலிபர் செல்வம் கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டார்.
இது குறித்து செல்வம் சங்கரன்கோவில் டவுண் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற கொள்ளையனை தேடி வருகின்றனர்.