செய்திகள்

மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த்

Published On 2018-12-15 06:19 IST   |   Update On 2018-12-15 06:19:00 IST
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். #MekedatuDam #TNGovernment #Rajinikanth
சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்று நினைக்கிறீர்களா?

பதில்:- மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்துக்கு கிடைக்கக் கூடிய தண்ணீருக்கு எந்த பாதிப்பும் வராது என்று மத்திய அரசு சொல்லி இருக்கிறது. அது எந்த அளவு உண்மை என்பதை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் நிச்சயம் தமிழக அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தான் இதற்கு ஒரே வழி.



கேள்வி:- ‘பேட்ட’ பட டீசர் பற்றி...

பதில்:- நல்லா வந்திருக்கு. நான் ரொம்ப மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.

கேள்வி:- ‘பேட்ட’ படத்தை தொடர்ந்து புதிய படத்தில் நடிப்பீர்களா?

பதில்:- முதலில் ‘பேட்ட’ படம் திரைக்கு வரட்டும். அது பற்றி பின்னர் பார்ப்போம்.

கேள்வி:- ரிசர்வ் வங்கி இயக்குனர் ராஜினாமா பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- அதில் உண்மையை சரியாக தெரிஞ்சுக்காமல், என்னால் பதில் சொல்ல முடியாது.

கேள்வி:- நீங்கள் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி ஓராண்டு ஆகிவிட்டதே...

பதில்:- இதற்கு பல முறை பதில் சொல்லிவிட்டேன்.

இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறினார். #MekedatuDam #TNGovernment #Rajinikanth
Tags:    

Similar News