செய்திகள்

காரிமங்கலம் பகுதியில் மதுவிற்ற 3 பேர் கைது

Published On 2018-12-13 16:26 GMT   |   Update On 2018-12-13 16:26 GMT
காரிமங்கலம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுவிற்ற 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் அனுமதியின்றி திருட்டு தனமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காரிமங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் மதுவிற்றதன் பேரில் பிடிப்பட்டனர். அவர்களை போலீசார் விசாரணை நடத்தியதில் லட்சுமி (வயது55) மாட்டிலாம்பட்டியை சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் லெனின் (42) சந்தை பேட்டையை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. 

பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோன்று கடத்தூர் போலீசார் நடத்திய சோதனையில் ஜஷில்பாஷா (36) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 6 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News