செய்திகள்

மாமல்லபுரம்-கல்பாக்கம் பகுதியில் கடுமையான பனிமூட்டம்- வாகன ஓட்டிகள் அவதி

Published On 2018-12-13 12:02 GMT   |   Update On 2018-12-13 12:02 GMT
மாமல்லபுரம் மற்றும் கல்பாக்கம் பகுதியில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றனர்.

மாமல்லபுரம்:

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த படி பெய்யவில்லை. தற்போது வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்யலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில், மாமல்லபுரம்-கல்பாக்கம் பகுதியில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலை கடலோரப் பகுதிகளான கோவளம், வட நெம்மேலி, தேவநேரி, பூஞ்சேரி, கடம்பாடி, மணமை, வெங்கம்பாக்கம், புதுப்பட்டினம், வாயலூர், கூவத்தூர், காத்தாங்கடை, வடபட்டிணம், பாண்டூர், முகையூர், தென்பட்டினம், அடையாளச்சேரி, நடுக்குப்பம் போன்ற பகுதிகளில் இன்று காலை 8 மணி வரை பனிமூட்டம் காணப்பட்டது.

சாலைகளில் பனி சூழ்ந்ததால் வாகன ஓட்டிகளுக்கு சாலைகள் தெளிவாக தெரியவில்லை. இதனால் வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றனர்.

மார்கழிக்கு முன்னரே கடும் பனிப்பொழிவு துவங்கி விட்டது. எனவே மார்கழி மாதம் இதைவிட அதிகமாக இருக்கலாம் என இந்த பகுதி மீனவர்களும், விவசாயிகளும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News