செய்திகள்

புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம், மக்கள் தீர்ப்பு இது - கமல்ஹாசன்

Published On 2018-12-11 13:55 GMT   |   Update On 2018-12-11 13:55 GMT
5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கூறுகையில், புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது என தெரிவித்துள்ளார். #2018electionresults #Kamalhassan
சென்னை:

ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கானா, மிசோரமில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றிக்கு அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது என பதிவிட்டுள்ளார். #2018electionresults #Kamalhassan
Tags:    

Similar News