செய்திகள்

அரியலூரில் துணை தாசில்தாரை தாக்கிய 3 வி.ஏ.ஓ.க்கள் ‘சஸ்பெண்டு’

Published On 2018-12-10 09:20 GMT   |   Update On 2018-12-10 09:20 GMT
அரியலூரில் துணை தாசில்தாரை தாக்கிய 3 வி.ஏ.ஓ.க்களை ‘சஸ்பெண்டு’ செய்து வருவாய் அதிகாரி சத்யநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் சேனாதிபதி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் ராயர். இவர் விடுமுறை தொடர்பாக அரியலூர் வருவாய் ஆய்வாளர் கார்த்திக்கேயன் மற்றும் அரியலூர் தலைமையிடத்து துணை தாசில்தார் குருமூர்த்தி ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே அது கைகலப்பாக மாறியது.

இதில் ராயருக்கு ஆதரவாக வெங்கனூர் கிராம நிர்வாக அதிகாரி பிரபாகரன் மற்றும் குலமாணிக்கம் கிராம நிர்வாக அதிகாரி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் செயல்பட்டனர்.

தகராறில் 3 பேரும் சேர்ந்து கார்த்திகேயன் மற்றும் குருமூர்த்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த கார்த்திகேயன் அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் துணை தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரை தாக்கியதாக கிராம நிர்வாக அலுவலர்கள் ராயர், பிரபாகரன், சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய 3 பேரையும் மாவட்ட வருவாய் அதிகாரி சத்யநாராயணன் ‘சஸ்பெண்டு’ செய்து உத்தரவிட்டுள்ளார்.



Tags:    

Similar News